கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைத்தால் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டிய தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதனை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் நோக்கம் வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதுதான்.
வைரஸ் பரவும் ஆபத்தில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போட முடிந்து பரவல் சங்கிலியை உடைக்க முடிந்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்
ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒரு போதும் அரசு பேசவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.